Friday, 7 March 2014

உலகம் ஒரு புள்ளியில்!

ஒரு புள்ளிதான் உலகம்..........தொடர்ச்சி.

அன்பர்களே நான் எந்த ஒரு நூலையோ அல்லது ஆய்வுக்கட்டுரைகளையோ ஆதாரமாக வைத்துக்கொண்டு இக்கட்டுரையை வரையவில்லை.பொதுவாக என் அனுபவ அறிவுக்கு எட்டியதைத்தான் இங்கே எழுத்து வடிவில்.கூறவிரும்புகிறேன்.எழுதத் தொடங்கும் முன் இன்னொன்றையும் நான் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.என்னைப்பொறுத்து நான் அறிந்தவரை உலகிலேயே எழுத வேண்டும் என ஆர்வப்பட்டு எழுதி அதை உலகுக்கு சொல்லவேண்டும் எனவும் ஆசைப்பட்டு தன் சிந்தையில் உதித்ததை எழுத்தாக்கம் செய்து இதை வெளியிடுங்கள் என்று நம்பிக்கையோடு அதைப்பதியும்போது அதில் எவ்வித் ஆதிக்கமும் செலுத்தாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு வெளியிடுகிற ஒரே ஒரு ஊடகம் உண்டு என்றால் அது எழுத்து தளம்தான்.உண்மையாகவே இது ஒரு வரப்பிரசாதம்தான்.அந்த வகையில் இத்தளத்திற்கு நன்றி கூறிக்கொண்டு விடயத்திற்கு வருகிறேன்.

இந்த உலகம் எனும் உருண்டையில் முதல் மனித அடையாளம் ஏதோ ஒரு புள்ளியில்தானே தோன்றியிருக்கும்.அப்படி முதலில் தோன்றிய அந்த முதல் அடையாளம் அல்லது படைப்பு அது ஆணாக இருந்திருக்குமா அல்லது பெண்ணாக இருந்திக்குமா..என்ற கேட்கப்படவேண்டிய கேள்வியும் எழுவதும் நியாம்தான்.அதே வேளை இன்னொரு கேள்வி அந்த முதல் அடையாளம் என்ன /எடுத்த எடுப்பிலேயே மனித உருவா அல்லது பரிணாம வளர்ச்சியின் விளைவா?பரிணாமத்தின் தொடக்கம் ஒரு அணுவாக இருந்திருக்கலாம். எனும் அனுமானத்திலும் அது சரியாக இருக்குமானால் முதல் தொடக்கம் ஒரு புள்ளியில்தான் துவங்கியிருக்கிறது.ஆகவே எப்படி எந்தக்கோணத்தில் ஆய்ந்தாலும் ஆரம்பம் என்பது ஒரு புள்ளியாகத்தான் இருந்திருக்கிறது.

அடுத்த கட்டம்.அந்த முதல் மனித உரு பெண்ணா அல்லது ஆணா?அதில்தான் நிறையக் கற்பனைகள் கதைகளாக பேசப்படுகின்றன.அவற்றில் எந்தக்கதையையும் இழுத்துக்கொண்டுவந்து அதாரம் காட்டி புதிதாக ஒரு பிரச்சனையை உருவாக்க விரும்பவில்லை.முதல் மனித உரு எதிலிருந்து வேண்டுமானாலும் பரிணாம வளர்ச்சிப்படி விளந்திருக்கட்டும் அதைப்பற்றியெல்லாம் பேசி அதிகமாக ஆராய்ச்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டாம்.உலக உயிர்களின் முதற்தோன்றல் என்பது ஒரு புள்ளியில்தான் என்பதை மட்டுமே நாம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.அந்த முதற்புள்ளி எங்கே எதுவாகத் தோன்றியது. என்பதுமட்டுமே நமக்கு இப்போது தேவையாக இருக்கிறது.அதை நாம் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும்.அதனால் இப்போது என்னபயன் என்றால். பயன் இல்லாமல் வீணாக இங்கே நம் நேரம் செலவழிக்கப்ப்டவில்லை என்பதையும் புரிந்து கொண்டு தொடருங்கள்.

மனித இனம் முதலில் விளைந்த மண்.அது எதுவாகவும் இருக்கட்டும்.அதன் ஆராய்ச்சி இன்னமும் தொடர்கிறது.அது தொடர்ந்து ஒரு முடிவுக்கு வரும்போது வரட்டும்.ஆகவே அதைவிட முக்கிய.ம்.மனிதம் என்ற அந்த முதற்புள்ளி எது அது ஆணா பெண்ணா/?இதுதான் சிக்கலான இடம்.வினை என்பது தானாக நிகழாது.அதை இயக்க ஒரு சக்தி தேவை.அதே நேரத்தில் ஒரு பொருள் தன் நிலையிலும் சக்தி பெற்றதாகத்தான் உள்ளது என்பதும் அறிவியல் உண்மை.ஒரு பாறாங்கல் ஒரு இடத்தில நிலை பெற்றுள்ளது என்றால் அது அதன் சக்தியால்தான்.அந்த சக்தியின் வினையால்தான் அது இடம் பெயராமல்.அவ்விடத்திலேயே நிலை பெற்றுள்ளது.அந்த சக்தியை வென்று அதை இடம் மாற்ற அதை விடக் கூடுதலான சக்தியைப் பிரயோகிக்கும் போது அதன் இயல்பான சக்தி தோற்று கூடுதல் சக்தியின் வெற்றியில் விளையும் வினையால் கல் இடம் பெயர்கிறது.ஆகவே ஒன்றை இன்னொன்று வெல்லும் போதுதான் வினை நிகழ்கிறது.

ஆகவே எது எதை வென்றது,அப்படியானால் துவக்கம் என்பது இரண்டு புள்ளிகளா?என்று நாம் விளங்கிக்கொள்ள முயலும் போது நிச்சயமாக துவக்கம் என்பது ஒன்றாகத்தான் இருந்திருக்கமுடியும்.அப்புறம் வினைப்படுத்த இன்னொன்றும் தோன்றியிருக்கும்.இதில் முதலில் தோன்றியது ஆண்புள்ளியா பெண்புள்ளியா?நிச்சயமாக அது பெண் புள்ளிதான்..அதை வினைப்படுத்த அப்புறம்தான் ஆண் புள்ளி தோன்றியிருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.நான் புள்ளி என்று சொல்வது 
ஒரு செல் அதாவது அணு.அதன் பரிணாம வளர்ச்சியின் இறுதி விளைவுதான் மனித வடிவம்.இந்த நிகழ்வுகள் முதலில் நிகழ்ந்த இடமும் ஒரு புள்ளிதான்.அந்த முதற்புள்ளியில் தொடங்கித்தான் உலகம் விரிந்தது.அதாவது மனித இனம் பரவி வாழத் துவங்கியது என்பதற்கு முதலில் உலக மொழிகளில் பேசப்படும் சில சொற்களின் ஒற்றுமை.மற்றும் ஒலிஒற்றுமை.

அ எனும் ஒலி ஒற்றுமை.அதில் தொடங்கும் அத்தனை ஒலிகளும்  பொதுவாகத்தான் உள்ளன.எழுத்துக்கள்தான் வேறுபடுகின்றன.அதுபோல் ஒன்று.---one,இரண்(டு)-டூtwo,த்ரீ சூலம்,த்ரிமூர்த்தி ---- three
அதுபோல் அனைத்து உலக நாட்கணக்கும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன..உலகத்தில்  பொதுவாகவே வாரத்தின் நாட்கள் ஏழு மாததின்நாட்கள் முப்பது..வருடத்தத்தின் நாட்கள் முன்னூற்று அறுபத்தைந்து.நவகிரகம் ஒன்பது.தமிழில் ஞாயிறு என்றால் சூரிய,ன் ஆங்கிலத்தில் sunday(sun+day) திங்கள் என்பது சந்திரன்.ஆங்கிலத்தில் mo(o)nday, இப்படி பல ஆதாரங்கள். உலகம் முழுவதும் தேடலாம்.

தொடரும்
கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment