பெண்ணடிமை ஒழிப்போம்!
நாம் மனதார பெண்ணடிமைத்தனம் ஒழிய வேண்டுமென எண்ணுகிறோமோ?என நமக்குள் நாமே முதலில் சுய பரிசோதனை செய்து கொள்வதும் அவசியமாகிறது.ஏனெனில் சிலர் பெண்ணடிமைத்தனம் பற்றி வாய்கிழியப் பேசுவார்கள்.ஆனால் செயல்முறை என்று வரும்போது தயங்குவார்கள்.ஊருக்குத்தான் உபதேசம் என்பதுபோல்தான் அவர்கள் செயல்பாடுகளிருக்கும்.அப்படித்தான்இன்னும் சிலர் பொய்யாக வாழ்ந்துகொண்டும் வீண் பேச்சுப் பேசிக்கொண்டும் ஊரையும் உலகத்தையும் ஏமாற்றிக்கொண்டும் திரிகிறார்கள்.
“பெண்களுக்கு சுயமரியாதை உரிமை கொடுத்தால் அவர்கள் தலையில் ஏறி அமர்ந்துகொண்டு மொளகாய் அரைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.அப்புறம் நம்முடைய சுயமரியாதை கேள்விக்குறியாகிவிடும்.அவர்களை ஒருபடி இறக்கியே வைத்துக்கொள்ளவேண்டும்”என வீணாக அஞ்சி வியாக்கியாணம்பேசுவோர்கள்தான் எல்லா ஆண்களும் என்று நான் அடித்துத் தைரியம்மாகச்சொல்வேன்.ஆகவே நிதர்சனமான பெண்ணுரிமைக்கு இன்னும் நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.பெண் விடுதலை என்பது ஓரளவிற்கு ஒரு மெல்லிய வெளிச்சம்தான் தெரிகிறது.அதற்காக உழைத்த பாரதியார் மற்றும் பெரியார் போன்ற மகான்களை போற்றவேண்டும்.
இன்னமும் முழுமையான பெண்ணுரிமை நாம் அடையவேண்டுமானால் பெண்களின் ஒட்டுமொத்தமான எழுச்சியும் துணிச்சலும் தூண்டப்படவேண்டும்.பெண்களின் பரிபூரண ஆதரவு இல்லாமல் இம்முயற்சி வெற்றி அடைவது சிரமம் என்பதே என்னுடைய ஆதங்கம்.இனியும் ஆணினத்தை நம்புவது சாத்தியம் இல்லை.இன்னொன்றும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இதற்கு எதிராக இருப்பவர்கள் ஆணினம் மட்டுமல்ல.பெண்களே பெண்ணினத்திற்கு எதிராக இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது.ஆண்களின் துணை இல்லாமல் பெண்களால் தனித்து இயங்க முடியாது என்ற அச்சத்தில்தான் இன்னமும் பெண்கள் இருந்துகொண்டு இருக்கிறார்கள்.
ஆணாதிக்கம் கொண்டவர்கள் அப்படித்தான் இச்சமுதாயத்தின் கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.ஆண்களுக்குச் சாதகமாகவே சாத்திர சம்பிரதாயங்களின் வடிவமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.மனித சமுதாயம் தோன்றிய காலத்தில் திருமண அமைப்பு என்பது இல்லாத காலத்தில் யாரும் யாரோடும் உறவு கொள்ளலாம் எனும் பாமரத்தனமான காலத்தில் பிறந்த குழந்தைகள் தாயின் அரவணைப்பில்தான் பாதுகாக்கப்பட வேண்டிய சூழலில் பெண்களே குடும்பத் தலைமைப் பொறுப்பில் இருந்துள்ள நிலையில் ஆண்கள் பொறுப்பற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
அதன் கட்டாயத்தில்தான் பெண்களின் பாதுகாப்புக்கருதி திருமணம் எனும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தி குடும்பம் என்ற ஒரு ஒழுக்கமான வாழ்வு எனும் நாககரிகத்தின் முதல் படியில் மனித இனம் தன் காலடியை எடுத்து வைக்கத் தொடங்கியது.
அதன் பின்புதான் குகையில் வாழ்ந்த மந்தை வாழ்க்கை தனித்தனி மண்வீடுகளைக்கட்டி குடும்பங்களாக வாழத் தெரிந்து கொண்டு அவரவர் வசதிவாய்ப்புக்களை ஒவ்வொன்றாகத் தேடிக்கொள்ளும் முயற்சியில் தகவல் பரிமாற்றத்திற்கு உதவியாக ஒலிகளை அடையாளமாக்கி மொழிகளை உருவாக்கினர்.பின்பு நெருப்பின்னைக்கண்டுபிடித்து மேலும் தன் நாகரிக முன்னேற்றத்தில் புதுப்புது உணவுப்பழக்கங்களில் மனிதன் மேம்பட்டான்.விவசாயம் செய்யவும் கற்றுக்கொள்ளும்போதுதான் உடமை உரிமை எனும் பிரச்சனைகள் எழுகின்றன.வலிமை உள்ளவன் உடமையில் உயர்கிறான்.வலிமை எனும் பாதுகாப்பு அவசியம் தோன்றும்போதுதான் ஆணாதிக்கம் தலை தூக்குகிறது.இந்த இடத்தில இயற்கை செய்த சதியினால்தான் ஆணாதிக்கம் வலிமை பெறுகிறது.அங்கே பெண்ணினம் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
பின்பு வலிமையுள்ளவவன் நிலை பெறவும்.மெலிந்தவன் இடம்பெயரவும் வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அதனால் இடம்விட்டுஇடம் ஊர்ந்து வசதி வாய்ப்புக்களை ஆய்ந்து கூட்டமாகவும் குழுக்களாகவும் குடும்பங்களாகவும் அமையும்போது சமுதாயக் கட்டமைப்பு உருவாகிறது.அப்போது ஆணாதிக்கம் வலிமை பெற்று தனக்குச்சாதகமாகவே சில ஒழுக்க விதிகளை உருவாக்கிக்கொள்ள முயல்கிறது.ஊர்ந்து வந்த இடம் ஒரு தலைமையில் ஊராக விரிகிறது.வலிமையுள்ள ஆணே தலைவனாகிறான்.மேலும் ஆணாதிக்கம் வலிமை பெறுகிறது.ஆகவே அன்று தொடங்கிய ஆணாதிக்கம் இன்றும் பெண்ணினத்தை அடக்கித்தான் ஆண்டுகொண்டிருக்கிறது.
வெளியுலகம் கண்டு விழித்துக்கொள்ளக்கூடாது என்பதில் ஆண்கள் மிகவும் கவனம் பார்த்துக்கொண்டார்கள்.கல்வி மறுக்கப்பட்டது.சுயமரியாதை உரிமை பறிக்கப்பட்டு பெண்கள் வெறும் பிள்ளைப்பேறு எந்திரங்களாக வீட்டுக்குள்ளேயே ஒடுக்கப்பட்டு பூட்டி வைக்கப்பட்டு.மணம்முடிக்கப்பட்டபின் பெண் என்பவள் ஒரு ஆணின் நிழலில்தான் வாழ வேண்டும் என்ற காட்டாயத்தையும் வேதமாக்கினார்கள்.
இந்த இடம்தான் பெண்ணுரிமைக்கு எமனாகி எடுக்கும் முயற்சிகளையெல்லாம் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது.அப்படியானால் அதற்கு ஒரே வழி என்ன என்று ஆராயும்போது எனக்கு ஒரு உள்ட்டா வழி ஒன்றுதான் உதயமாகிறது.
ஆமாம் பெண் கட்டிக்கொடுக்கப்படுகிறாள் என்ற சொல் ஒழிக்கப்படவேண்டும்.பெண்ணுக்குப் புகுந்தவீடு என்பது இடம் மாறி இனி பிறந்தவீடே சொந்த வீடு என்ற நிலை வரவேண்டும்.இனி ஆண்தான் பெண் வீட்டிற்கு இடம் பெயர வேண்டும்.பெண் ஆணின் வீட்டில் என்ற நிலைமாறி ஆண் பெண்ணின் வீட்டில் என்றாகவேண்டும்.திருமணச்சடங்குகள் பெண்ணின் வீட்டில்தான் நடைபெற வேண்டும்.இனி ஆண்வாரிசு என்றில்லாமல் பெண்வாரிசு என்று உரிமைநிலை மாற்றப்படவேண்டும்.அவ்வாறு நிலைமை மாறும்போது மாமியார் கொடுமை என்ற இம்சைக்கோ கணவனின் பாலியல் சித்ரவதை என்ற வன்முறைக்கோ வரதட்சனை என்ற கட்டாயப் பணம் பறிப்புக்கோ அங்கே வேலை இருக்காது.இதை விட்டால் பெண்ணுரிமை மீள வேறு மார்க்கம் இல்லவே இல்லையென உறுதிப்படச்சொல்லலாம்.இது வெறும் பேச்சல்ல இதன் வரைவு மசோதா தாக்கலாகி.விரைவில் சட்டமாக்கினால் ஆச்சர்யப்படுவதற்கில்ல.
இனி திருமண வீட்டில்
“மண மகளே மருமகளே வா வா !” என்ற பாட்டுக்குப்பதில்
“மண மகனே மருமகனே வா வா” என்ற பாட்டுத்தான் முழங்க வேண்டும்.
இப்படி நிலைமை தலை கீழாக மாறினால் ஒழிய பெண்ணுரிமை என்பது வெறும் வெட்டிப்பேச்சாக மாட்டுமே பேசப்பட்டு வரும்.
பெண்ணுரிமை அல்லது பெண் விடுதலை என்ற இலக்கை ஒருநாளும் எட்ட இயலவே இயலாது என்பதே திண்ணம்..
கொ.பெ.பிச்சையா.
நாம் மனதார பெண்ணடிமைத்தனம் ஒழிய வேண்டுமென எண்ணுகிறோமோ?என நமக்குள் நாமே முதலில் சுய பரிசோதனை செய்து கொள்வதும் அவசியமாகிறது.ஏனெனில் சிலர் பெண்ணடிமைத்தனம் பற்றி வாய்கிழியப் பேசுவார்கள்.ஆனால் செயல்முறை என்று வரும்போது தயங்குவார்கள்.ஊருக்குத்தான் உபதேசம் என்பதுபோல்தான் அவர்கள் செயல்பாடுகளிருக்கும்.அப்படித்தான்இன்னும் சிலர் பொய்யாக வாழ்ந்துகொண்டும் வீண் பேச்சுப் பேசிக்கொண்டும் ஊரையும் உலகத்தையும் ஏமாற்றிக்கொண்டும் திரிகிறார்கள்.
“பெண்களுக்கு சுயமரியாதை உரிமை கொடுத்தால் அவர்கள் தலையில் ஏறி அமர்ந்துகொண்டு மொளகாய் அரைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.அப்புறம் நம்முடைய சுயமரியாதை கேள்விக்குறியாகிவிடும்.அவர்களை ஒருபடி இறக்கியே வைத்துக்கொள்ளவேண்டும்”என வீணாக அஞ்சி வியாக்கியாணம்பேசுவோர்கள்தான் எல்லா ஆண்களும் என்று நான் அடித்துத் தைரியம்மாகச்சொல்வேன்.ஆகவே நிதர்சனமான பெண்ணுரிமைக்கு இன்னும் நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.பெண் விடுதலை என்பது ஓரளவிற்கு ஒரு மெல்லிய வெளிச்சம்தான் தெரிகிறது.அதற்காக உழைத்த பாரதியார் மற்றும் பெரியார் போன்ற மகான்களை போற்றவேண்டும்.
இன்னமும் முழுமையான பெண்ணுரிமை நாம் அடையவேண்டுமானால் பெண்களின் ஒட்டுமொத்தமான எழுச்சியும் துணிச்சலும் தூண்டப்படவேண்டும்.பெண்களின் பரிபூரண ஆதரவு இல்லாமல் இம்முயற்சி வெற்றி அடைவது சிரமம் என்பதே என்னுடைய ஆதங்கம்.இனியும் ஆணினத்தை நம்புவது சாத்தியம் இல்லை.இன்னொன்றும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இதற்கு எதிராக இருப்பவர்கள் ஆணினம் மட்டுமல்ல.பெண்களே பெண்ணினத்திற்கு எதிராக இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது.ஆண்களின் துணை இல்லாமல் பெண்களால் தனித்து இயங்க முடியாது என்ற அச்சத்தில்தான் இன்னமும் பெண்கள் இருந்துகொண்டு இருக்கிறார்கள்.
ஆணாதிக்கம் கொண்டவர்கள் அப்படித்தான் இச்சமுதாயத்தின் கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.ஆண்களுக்குச் சாதகமாகவே சாத்திர சம்பிரதாயங்களின் வடிவமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.மனித சமுதாயம் தோன்றிய காலத்தில் திருமண அமைப்பு என்பது இல்லாத காலத்தில் யாரும் யாரோடும் உறவு கொள்ளலாம் எனும் பாமரத்தனமான காலத்தில் பிறந்த குழந்தைகள் தாயின் அரவணைப்பில்தான் பாதுகாக்கப்பட வேண்டிய சூழலில் பெண்களே குடும்பத் தலைமைப் பொறுப்பில் இருந்துள்ள நிலையில் ஆண்கள் பொறுப்பற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
அதன் கட்டாயத்தில்தான் பெண்களின் பாதுகாப்புக்கருதி திருமணம் எனும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தி குடும்பம் என்ற ஒரு ஒழுக்கமான வாழ்வு எனும் நாககரிகத்தின் முதல் படியில் மனித இனம் தன் காலடியை எடுத்து வைக்கத் தொடங்கியது.
அதன் பின்புதான் குகையில் வாழ்ந்த மந்தை வாழ்க்கை தனித்தனி மண்வீடுகளைக்கட்டி குடும்பங்களாக வாழத் தெரிந்து கொண்டு அவரவர் வசதிவாய்ப்புக்களை ஒவ்வொன்றாகத் தேடிக்கொள்ளும் முயற்சியில் தகவல் பரிமாற்றத்திற்கு உதவியாக ஒலிகளை அடையாளமாக்கி மொழிகளை உருவாக்கினர்.பின்பு நெருப்பின்னைக்கண்டுபிடித்து மேலும் தன் நாகரிக முன்னேற்றத்தில் புதுப்புது உணவுப்பழக்கங்களில் மனிதன் மேம்பட்டான்.விவசாயம் செய்யவும் கற்றுக்கொள்ளும்போதுதான் உடமை உரிமை எனும் பிரச்சனைகள் எழுகின்றன.வலிமை உள்ளவன் உடமையில் உயர்கிறான்.வலிமை எனும் பாதுகாப்பு அவசியம் தோன்றும்போதுதான் ஆணாதிக்கம் தலை தூக்குகிறது.இந்த இடத்தில இயற்கை செய்த சதியினால்தான் ஆணாதிக்கம் வலிமை பெறுகிறது.அங்கே பெண்ணினம் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
பின்பு வலிமையுள்ளவவன் நிலை பெறவும்.மெலிந்தவன் இடம்பெயரவும் வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அதனால் இடம்விட்டுஇடம் ஊர்ந்து வசதி வாய்ப்புக்களை ஆய்ந்து கூட்டமாகவும் குழுக்களாகவும் குடும்பங்களாகவும் அமையும்போது சமுதாயக் கட்டமைப்பு உருவாகிறது.அப்போது ஆணாதிக்கம் வலிமை பெற்று தனக்குச்சாதகமாகவே சில ஒழுக்க விதிகளை உருவாக்கிக்கொள்ள முயல்கிறது.ஊர்ந்து வந்த இடம் ஒரு தலைமையில் ஊராக விரிகிறது.வலிமையுள்ள ஆணே தலைவனாகிறான்.மேலும் ஆணாதிக்கம் வலிமை பெறுகிறது.ஆகவே அன்று தொடங்கிய ஆணாதிக்கம் இன்றும் பெண்ணினத்தை அடக்கித்தான் ஆண்டுகொண்டிருக்கிறது.
வெளியுலகம் கண்டு விழித்துக்கொள்ளக்கூடாது என்பதில் ஆண்கள் மிகவும் கவனம் பார்த்துக்கொண்டார்கள்.கல்வி மறுக்கப்பட்டது.சுயமரியாதை உரிமை பறிக்கப்பட்டு பெண்கள் வெறும் பிள்ளைப்பேறு எந்திரங்களாக வீட்டுக்குள்ளேயே ஒடுக்கப்பட்டு பூட்டி வைக்கப்பட்டு.மணம்முடிக்கப்பட்டபின் பெண் என்பவள் ஒரு ஆணின் நிழலில்தான் வாழ வேண்டும் என்ற காட்டாயத்தையும் வேதமாக்கினார்கள்.
இந்த இடம்தான் பெண்ணுரிமைக்கு எமனாகி எடுக்கும் முயற்சிகளையெல்லாம் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது.அப்படியானால் அதற்கு ஒரே வழி என்ன என்று ஆராயும்போது எனக்கு ஒரு உள்ட்டா வழி ஒன்றுதான் உதயமாகிறது.
ஆமாம் பெண் கட்டிக்கொடுக்கப்படுகிறாள் என்ற சொல் ஒழிக்கப்படவேண்டும்.பெண்ணுக்குப் புகுந்தவீடு என்பது இடம் மாறி இனி பிறந்தவீடே சொந்த வீடு என்ற நிலை வரவேண்டும்.இனி ஆண்தான் பெண் வீட்டிற்கு இடம் பெயர வேண்டும்.பெண் ஆணின் வீட்டில் என்ற நிலைமாறி ஆண் பெண்ணின் வீட்டில் என்றாகவேண்டும்.திருமணச்சடங்குகள் பெண்ணின் வீட்டில்தான் நடைபெற வேண்டும்.இனி ஆண்வாரிசு என்றில்லாமல் பெண்வாரிசு என்று உரிமைநிலை மாற்றப்படவேண்டும்.அவ்வாறு நிலைமை மாறும்போது மாமியார் கொடுமை என்ற இம்சைக்கோ கணவனின் பாலியல் சித்ரவதை என்ற வன்முறைக்கோ வரதட்சனை என்ற கட்டாயப் பணம் பறிப்புக்கோ அங்கே வேலை இருக்காது.இதை விட்டால் பெண்ணுரிமை மீள வேறு மார்க்கம் இல்லவே இல்லையென உறுதிப்படச்சொல்லலாம்.இது வெறும் பேச்சல்ல இதன் வரைவு மசோதா தாக்கலாகி.விரைவில் சட்டமாக்கினால் ஆச்சர்யப்படுவதற்கில்ல.
இனி திருமண வீட்டில்
“மண மகளே மருமகளே வா வா !” என்ற பாட்டுக்குப்பதில்
“மண மகனே மருமகனே வா வா” என்ற பாட்டுத்தான் முழங்க வேண்டும்.
இப்படி நிலைமை தலை கீழாக மாறினால் ஒழிய பெண்ணுரிமை என்பது வெறும் வெட்டிப்பேச்சாக மாட்டுமே பேசப்பட்டு வரும்.
பெண்ணுரிமை அல்லது பெண் விடுதலை என்ற இலக்கை ஒருநாளும் எட்ட இயலவே இயலாது என்பதே திண்ணம்..
கொ.பெ.பிச்சையா.

No comments:
Post a Comment