Tuesday, 18 February 2014

யார் மனிதன்?

யார் மனிதன்?
மனதன்தான் மனிதன்.

 மனிதன்என்றால்என்ன?மனிதனுக்கும்மற்ற விலங்கினங்களுக்
கும் என்ன வேற்றுமை என்று பலரும் பல்வேறு கோணங்களில்
ஆராயந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.என்றாலும் நம்முடைய அனுபவத்தில் மனிதனை மற்ற
உயிரினங்களோடு ஒப்பபிட்டுப்பார்க்கையில் வெளிப்ப்படையாகவே ஓர் உண்மையை புரிந்து கொள்ள முடிகிறது.

 நாம் வாழ்வதற்குத் தேவைப்பபடும்
தேவைகளை நமது அனுபவங்கள் நமக்குக்கற்றுத்தந்துள்ளன.
அப்படிப்பினைகள் நல்லது கெட்டது,தூயது---தீயது,வேண்டுவது--- வேண்டாதது எனப்பிரித்தறியும் திறன் தந்துள்ளன.அந்தத்திறனால் உகந்தனவற்றைத் தெளிந்து தெரிவு செய்யவும் மனிதனால் மட்டுமேமுடிகிறது

தேர்ந்தனவற்றைத் தேர்ந்து நமது
தேர்ச்சிக்கு ஏற்பநமக்குள் உணவு,மொழி,உடை,குடியிருப்பு,விவசாயம்,தொழில் எனப்பல கலாச்
சாரஙள் உருவாகிட நமது பட்டறிவுகளே அடிப்படையாக இருந்துள்ள
மனிதஇனத்தின் வாழ்க்கை ஒழுங்குமுறை வணக்கம் செய்யப்படவும்,
சீரமைக்கப் படவும்  மனிதனுக்குள் 
மட்டும் ஒர் அதிசயக் கருவி உதவி வந்துள்ளது..அந்த  அரிய பொருள் 
மனித இனத்திற்கு  மட்டுமே 
இறைவனால் வழங்கப்பட்டுள்ளது.அப்பொருள்தான் மக்களை 
மாக்களிடமிருந்து வேறுபடுத்தி உயர்த்தியதுஅது எது?அதுதான்  மனம் எனும் அற்புதக் கருவி.மனம் என்பது மனிதனுக்கு மட்டுமே 
இறைவனால் அருளப்பட்டு உள்ளது..மனம் கொடுக்கப்
பட்டுள்ளதால்தான் மனதனென்றும் பின்மனிதன் என்றும் பெயர் மாற்றம் பெற்றான்.மனம் என்பதற்கு பல பொருள்கள் உண்டு.
அவைஆறாம் அறிவு,பகுத்தறிவு,
சுயஅறிவு,சிந்தை மற்றும் சிந்தனை 
எனப் பல பெயர்களில் ஒரு பொருளாக 
விளங்குகிறது  .
.அவ்வாறான அந்த உன்னத அற்புதப் பொருளைஇறைவனுக்கே அற்பணித்து இறைவனுக்குப் 
பிடித்தமான அல்லது அவன் படைப்புகளைப் போற்றிக் காப்பதுமான நற்
பணிகளைச் செய்வோம்.
அதுவே மெய்யான திருப்பணிகளாகும்.
        நல்லதே சிந்திப்போம்.நல்லதே 
செய்வோம்.மனம் என்னும் மனச்சாட்சி கூறும் நியாயங்களைக் கேட்போம்.
உலகம் தூய்மைப்பட உற்றத்
துணையாக இருப்போம்.மனித இனம் 
மற்றும் உயிர்கள்
அனைத்தும் நலமாக வாழ மனதன்தான் மனிதனென வாழ்ந்து வையகம் வாழ வாழ்வோமாக.
கொ.பெ.பி.அய்யா.








படிக்கட்டுப் பயணம்

படிக்கட்டுப்  பயணம்.


                                    நாம் இப்போதெல்லாம் ஒரு செய்தியை அன்றாடமும் பார்த்துப் பார்த்துக் கண்கலங்குகின்றோம்.அதுவும் படிக்கின்ற மாணவர்கள்தான் இப்படிப்பட்ட துயர 
சம்பவங்களுக்கு ஆட்படுகிறார்கள் என்று எண்ணும்போது மனம்  மிகவும் கசங்கிப் போகிறது.  இப்படிப்பட்ட ஆபத்தான பேருந்துப் பயணம் அவர்களுக்கு ஒரு விளையாட்டாகத் தெரிகிறது.
ஆனால் அதனால்  அவர்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை.பேருந்து நடத்துனர்களின் எச்சரிக்கைகளை அவர்கள் செவிகளில் வாங்கிக்கொள்வதே இ்ல்லைஇதனால் மாணவர்களுக்கும் நடத்துனர்களுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதும்அதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதும்பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாவதும் அன்றாட 
நிகழ்வுகளாகிவிட்டன.
                                    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப்பற்றி எத்தனை எத்தனை 
கனவுகளை தங்கள் நெஞ்சங்களில் சுமந்து கொண்டு இருப்பார்கள்?..அவர்களை 
எப்படியெல்லாம் போற்றி வளர்த்திருப்பார்கள்?அவர்களுக்காகப் பெற்றோர்கள எத்தனை 
எத்தனை சுகங்களை இழந்திருப்பார்கள்?எவ்வளவு பணங்களை அவர்களுக்காக் கொட்டியிருப்பார்கள்?இவற்றையெல்லாம் கொஞ்சமும் எண்ணிப்பார்க்காமல் நொடிப்பொழுதில் 
தங்களைத் தொலைத்து பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றி விடுகிறார்களே என்று எண்ணும்போது இதயம் துடித்துப்போகிறது.
                                    நொடிப் பொழுதான அரட்டை மகிழ்ச்சிக்காக ஆரவாரம் செயவதால் மற்றப் பிரயாணிகளுக்கும் ஏற்படும் தொந்தரவுகளைப் பற்றி அவர்கள் சிறிதும் யோசிக்கவில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும்தங்களின் பாதுகாப்பைப் பற்றியாவது அவர்கள் சிந்திக்க வேண்டாமா?எதிர்காலத்தில அவர்களில் எத்தனை மருத்துவர்கள் இருப்பார்கள,? எத்தனை பொறியியல் 
வல்லுனர்கள் இருப்பார்கள்?எத்தனை விஞ்ஞானிகள் இருப்பார்கள்?இத்தனை அறிஞர்களும் இ்ந்த நாட்டுக்குக் கிடைக்காமல் போய்விடுவார்களே.இதனால் நமது 
நாட்டுக்கும் இழப்புத்தானேஆகவே அவர்கள் விளையாட்டாகச் செய்யும் விபரீதங்களால் யார் யாருக்கெல்லாம் எத்தனை எத்தனை இழப்புகள் பாருங்கள்.
                                    வயதுமுதிரந்த காலத்தில் தங்களைப் பேணுவார்கள் என்று தங்களினின் 
பிள்ளைகளை நம்பித்தானே பெற்றோர்கள் காத்திருக்கிறார்கள்.அவர்களை ஏமாற்றுவதில் 
என்ன  நியாயம் இருக்கிறது?.சிலரின் சிறுபொழுது ஆரவாரமகிழ்ச்சிக்காக பிறரை அல்லல்படுத்துவதற்கு என்ன உரிமை இருக்கிறது?.அவர்கள் இந்த நாட்டின் வளம்  என்று நம்பித்தானே 
அவர்கள் கருவாக உருப்பெற்றதிலிருந்து  அவர்களுக்காக வளர்ப்பு,கல்விமருத்துவம்,மற்றும் அடிப்படை வசதிகள்-வாய்ப்புகள் என அரசாங்கமும் செலவிட்டு வருகிறது.அத்தனை எதிர்பார்ப்புகளையும் நொடிப்பொழுதில் அவர்களின் விளையாட்டு மரணத்தால் வீணடித்து விடுகிறார்களே.
                                                ஆகவேதான் படிக்கட்டில் பயணம் செய்வோர்க்குச் சொல்கிறேன்.
நீங்கள் நாட்டைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லை என்றாலும் தயவு கூர்ந்து உங்களது வீட்டைப்பற்றி எண்ணிப் பாருங்கள்உங்களையே நம்பி  உங்களையே எதிர்நோக்கிக் காத்திருக்கும் உங்களின் பெற்றோருக்காக,மனைவிமக்களுக்காக            யோசியுங்கள்.தேவைதானா இந்தப் படிக்கட்டுப்பயணம்வீரசாகசம் செய்வதாக எண்ணி விலை மதிப்பற்ற இன்னுயிரை நொடிப்பழுதில் இழந்து விடாதீர்கள யாரும் உங்களுக்கு வீரச்சக்கரா விருது வழங்கப்போவதில்லை இடமிருந்தால் ஏறிக்கொள்ளுங்கள்இல்லையெனில் அடுத்த பேருந்துக்காக்க் காத்திருங்கள்.உங்களுக்காகக் காத்திருப்போரை ஏமாற்றி விடாதீர்கள்.


கொ.பெ.பி.அய்யா.



Monday, 17 February 2014

நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டு கோள்.
========================================

கருத்தும் விமர்சனமும்.
---------------------------------------
கருத்தும் விமர்சனமும் இரட்டைப்பிறவிகள் போல் தோன்றலாம்.ஆனாலும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.கருத்துக்கூறுவது எளிதானதுவிமர்சனம் என்பதுச் சற்றுச் சிக்கல்
ஆனது.கருத்தோ! விமர்சனமோஎதுவானாலும் சொல்லப்படும் படைப்பின் ஆன்மா
என்ன பேசுகிறது என்பதைப் புரிந்துக் கொண்டு எழுதும் போதுதான் அந்தக் கருத்தும்
விமர்சனமும் ஆக்கம் பெறும்.படைப்பென்றாலே அதற்கு உயிர் உண்டு.அது இயற்கையின்
படைப்போ!செயற்கையின் படைப்போ!எதுவானாலும் இயங்கும் அத்தனைக்கும் உயிர்
உண்டு.அது போன்றே எழுதப்படும் படைப்புக்களுக்கும்.உயிர் உண்டு.உயிர் உள்ள
எழுத்துக்கள் மட்டுமே இலக்கியமாக இயக்கம் பெறுகின்றனஆகவே ஒருக் கவிதையில்
உயிர் எந்தவிடத்தில் துடிக்கறதோ அதுதான் கவிதையின் மூல்க்கரு என்பதைக் கண்டறிந்து
அதைச் சூழ்ந்தேக் கருத்தும் விமர்சனமும் அமைதல் வேண்டும்.

சிலப்படைப்புக்கள் வெளிப்படைப்பாகவே விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
சிலப்படைப்புக்கள் உட்பொதிந்தப் பொருளுடையதாக இருக்கும் அதுப் படைப்பபாளியின்
உணர்வைப் பொருத்திருக்கும்.அவ்வாறானப் படைப்புக்களை ஒருமுறைக்கு இருமுறைப்
படித்தால் விளங்கிக் கொள்ளலாம்.வேறு வேலை இல்லையாக்கும் எனும் அவசரம்
உள்ளவர்கள் இந்த வேலையைத்தள்ளிவிடலாம்.ஏனெனில் இதை ஒரு வேலையெனக்
கருதாமல் கடமையெனக்கருதிப் பொறுமையுடன்,பொறுப்புடன்,ஆர்வமுடன் செய்திடல்
வேண்டியதும் அவசியமாகும்.

சிலர் படைப்பினைப் படித்துப் பார்க்காமலயே கட்டாயத்தில் மொய் எழுதும் பாங்கில்
ஒப்புக்குச்சப்பாக அருமை,சிறப்பு,நன்று அல்லது ஓர் ஒற்றைச்சொல் வழக்கமான ஏக
வசனத்தில் எழுதிவிட்டு ஓடிவிடுகிறார்கள்.அப்படிக்கூறுவதுக் கருத்தே அல்ல.அதற்குச்
சொல்லாமல் இருப்பதேச்சுகமாகும்.சரிக்கருத்துக்கும் விமர்சனத்திற்கும் உள்ள வேற்றுமைக்
காண்போம்.

கருத்து.
------------
கருத்து என்பது மேலோட்டமானது.இதுப்பாராட்டும் விதமாகவோ அல்லதுத் தட்டிக்கொடுத்து
ஊக்குவிப்பதாகவோ இருப்பது அவசியம்.மேலும் படைப்பிலுள்ளப் பிழைத்திருத்தங்களைக்
கவனமாகப் படைப்பாளியின் உணர்வுக்கு மதிப்புக்கொடுத்து  நளினமாகத்திருத்தி வளர்க்கும்
விதமாக இதுவா,அதுவா,இப்படி இருப்பின் நலமாக இருக்குமா ,மீள் பார்வை செய்யலாமே,
இன்னும் கொஞ்சம் முயன்றிருக்கலாமே,இன்னும் எழுதுவீர் போன்ற கொஞ்சும் மொழியில்
பகிர்தல் வேண்டும்.அதுவும் முதலில் நிறைகளைச் செப்பிப் பின் திருத்தங்கள் மொழிதல்
வேண்டும்.பொதுவாக்ககருத்துக் கவியை ஒட்டியதாக இருத்தல் மிகமிக அவசியமாகும்.

விமர்சனம்.
-------------------
இதுச் சற்றுச் சிக்கலான விடயம்.அதை ஆராய்ந்துதான் தளமும் விமர்சனம் எனும் இடத்தை
விலக்கி வைத்துள்ளதுஏனெனில் விமர்சனம் செய்வதற்கு நிறைந்த அனுபவம் பயிற்சி
வேண்டும்.ஒரு படைப்பை விமர்சிக்கும் முன் நிறைகளப்பாராட்ட மூளையை  அதிகமாகக்
கசக்க வேண்டியதில்லை.ஆனால் குறைக்ளச்சுட்டுவதற்குத் தேவையான முன்னறிவு
வேண்டும்.மேற்கோள்கள் காட்டத் தெளிந்திருக்க வேண்டும்.அதற்கான ஆதாரங்கள் தேடித்
திரட்டவேண்டும்.ஏனெனில் படைப்பாளியின் எதிர்த்தாக்குதலைத்தாக்குப் பிடிக்கும் சமாளிப்புக்கு நம்மிடம் தற்காப்புக்குத்தேவையானத் தகுந்த ஆயுதங்கள் தயார் நிலையில்
இருத்தல் மிகமிக அவசியம்ஏனெனில் வாதம் செய்வதும் ஒருவிதமான யுத்தம்தான்.
அதனால்தான் அதனைச் சொற்போர் என்பார்கள்.ஏனெனில் அறிஞர்கள் அவரவர் நிலையை
நிலை நாட்டவேண்டும் என்பதில் வலிமையுள்ளவர்களாகவே இருப்பார்கள்.ஆகையால்
கருத்தைக்கவனமில்லாமல் விமர்சனமாக்கி வீணாக மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே இவ்விரண்டிற்கும் வேற்றுமைக்காட்டி எனக்குத்தெளிந்த அறிவில் கூறிக் கவனம் காக்க வேண்டினேன்.
நன்றி
அன்பன்.கொ.பெ.பி.அய்யா.